Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM
பழநி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ அன்பழகன்(65) கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் வளர்ச்சிப் பிரிவு அதிகாரியாகப் பணிபுரிந்தவர் அன்பழகன். தனது பணியிலிருந்து விலகி 2006-ம் ஆண்டு பழநி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
கரோனா தொற்று பாதிப்பால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இவருக்கு மனைவி பேபிபொன்மணி, மகள் எஸ்தர்ஜானிகா உள்ளனர்.
அன்பழகனின் இறுதிச் சடங்கு சொந்த ஊரான மதுரைமாவட்டம் பேரையூரில் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT