Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

அஞ்சல் துறை குறைதீர் கூட்டம் :

சென்னை

அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் வரும் 23-ம் தேதியன்று குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் மூலமாக, தபால் சேவைகள் பெற்றுவரும் பயனாளிகள், சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் மூலமாகவோ மின்னஞ்சல் (doannaroadhpo.tn@indiapost.gov.in) மூலமாகவோ வரும் 20-ம் தேதிக்குள் தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600002 என்ற முகவரிக்கு, ‘குறைதீர்வு முகாம்’ என்ற தலைப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.

அண்ணா சாலை தலைமை அஞ்சலக அதிகாரி எம்.ராமன் இதை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x