Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

சென்னை குடிநீர் வாரியத்தின் பணிமனை அலுவலகம் இடமாற்றம் :

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் 44-வது உதவிப் பொறியாளர் பணிமனை அலுவலகம், பெரம்பூரிலிருந்து வியாசர்பாடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை குடிநீர் வாரியத்தின் 4-வது பகுதி அலுவலகத்துக்கு உட்பட்ட, 44-வது உதவிப் பொறியாளர் பணிமனை அலுவலகம் தற்போது கதவு எண் 3, வடிவேல் 2-வது குறுக்குத் தெரு, பெரம்பூர் என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இது வரும் 14-ம் தேதி முதல் கதவு எண் 41/4, சுப்பிரமணியம் பிரதான தெரு, வியாசர்பாடி என்ற முகவரியில் செயல்பட உள்ளது.

பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள் மற்றும் குடிநீர் வரி மற்றும் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக புதிய முகவரியில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிப் பொறியாளரை 8144930044 என்ற எண்ணிலும், துணைப் பகுதி பொறியாளரை 8144930211 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x