Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

ஆயுதங்களுடன் 6 பேர் கைது :

புதுச்சேரி அரியாங்குப்பம் கிரீன் சிட்டி ஒட்டியுள்ள ஏரிக்கரையோரம் ரவுடி கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது. போலீஸாரை கண்டதும் அங்கிருந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. 6 பேரைபோலீஸார் சுற்றி வளைத்தனர். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்ட னர். பிடிபட்டவர்களை சோதனை யிட்டதில் 6 கத்திகள், 2 செல்போன்கள் இருந்தன அதை பறிமுதல் செய்த போலீஸார், 2 மோட்டார் பைக்குகளையும் கைப்பற்றினர்.

விசாரணையில், முருங்கப் பாக்கம் பள்ளத்தெரு முகிலன் (26), மணவெளி மாம்பழ சதீஷ் (எ) மணிகண்டன் (27), பாரதி நகர் ஹேமு (எ) ஹேமநாதன் (25), மணவெளி கவியரசன் (21), முதலியார்பேட்டை அருண் (எ) அசோக்குமார் (25), மணவெளி அய்யனார் (28) என்பது தெரிய வந்தது. கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஜிம் பாண்டியன் ஆதரவாளர்களான இவர்களில் மணிகண்டன் மற்றும் முகிலன் மீது கொலை, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. ஜிம் பாண்டியனை கொலை செய்த எதிராளிகளை கொலை செய்ய திட்டமிட்ட இக்கும்பல், வழக்கு செலவுக்கு பணம் தேவைப்படுவதால் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் அங்கு பதுங்கிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சோதனை முடிவுக்கு பின்னர் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x