Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு - மாவட்டங்களில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் :

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன் மாநகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் சையது பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதேபோல் கோரிப்பாளையம், பைபாஸ் ரோடு, அரசரடி, புதூர், சோழவந்தான், வாடிப்பட்டி, ஒத்தக்கடை, திருமங்கலம், அலங்காநல்லூர், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வில்லிபுத்தூர் ராஜாஜி சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக நகர காங்கிரஸ் தலைவர் வன்னியராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் ராஜபாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி

தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதேபோல் பெரியகுளம், போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உட்பட 23 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ரோமன் சர்ச் பெட்ரோல் நிலையம் அருகே ராமநாதபுரம் நகர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகர் காங்கிரஸ் தலைவர் கோபி தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் சார்பில் நகரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் நிலையங்கள் முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் பெரியார் சிலை அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x