Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

சேலம் சன்னியாசிகுண்டு ஏரியில் இறந்து மிதந்த மீன்களால் மக்கள் அதிர்ச்சி :

சேலம் சன்னியாசிகுண்டு அருகே உள்ள குருவிப்பண்ணை ஏரியில் இறந்து மிதந்த மீன்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த சன்னியாசிகுண்டு பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் குருவிப் பண்ணை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நேற்று மீன்கள் இறந்து மிதந்தன. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் காவல் நிலையம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ஏரிப் பகுதிக்கு வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போலீஸார் ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர். மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினர், இறந்த மீன்கள் மற்றும் ஏரி நீர் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்தனர். மாதிரிகளை ஆய்வு செய்து, மீன்கள் இறப்புக்கான காரணம் கண்டறியப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஏரி அருகே உள்ள சாயத்தொழிற்சாலைகளில் இருந்து, வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரால், நீரில் ரசாயனக்கலப்பு ஏற்பட்டு, மீன்கள் இறந்திருக்கும். எனவே, ஏரியில் சாயக்கழிவு நீர் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x