Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

தமிழகத்தில் குறைந்து வரும் தொற்று பரவல் - புதிதாக 16,813 பேருக்கு கரோனா : ஒரே நாளில் 358 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 16 ஆயிரத்து 813 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 358 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங் களாக அதிதீவிரமாக இருந்து வந்த கரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது மெல்ல குறைந்து வரு கிறது. கடந்த மாதத்தில் தினசரி தொற்று பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது பாதி யாக குறைந்துள்ளது. தொற்று பர வலை மேலும் குறைக்கும் விதமாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அத் துடன் தடுப்பூசி போடும் பணியை யும் சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் புதி தாக கரோனா பாதிப்பு ஏற்படுவது குறைந்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், நேற்று புதிதாக 16,813 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று புதிதாக 9,278 ஆண்கள், 7,535 பெண்கள் என மொத்தம் 16,813 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட னர். அதிகபட்சமாக கோயம்புத் தூரில் 2,236 பேருக்கும், சென்னை யில் 1,223 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 8 ஆயிரத்து 838 ஆக அதிகரித்துள் ளது. சென்னையில் மட்டுமே 5 லட்சத்து 22 ஆயிரத்து 52 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 5 லட் சத்து 2 ஆயிரத்து 184 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 91 ஆயிரத்து 646 பேர் குணமடைந் துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 3,598, கோயம்புத் தூரில் 5,057 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 32,049 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர்.

சென்னையில் 12,210, கோயம் புத்தூரில் 21,184 பேர் உட்பட மொத் தம் 1 லட்சத்து 88,664 பேர் சிகிச்சை யில் உள்ளனர். அரசு மற்றும் தனி யார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 358 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 528 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென் னையில் மட்டும் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 658 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இது வரை 2 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரத்து 398 பேருக்கு பரி சோதனைகள் நடந்துள்ளன.

நேற்று மட்டும் 1 லட் சத்து 71 ஆயிரத்து 237 பேருக்கு பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

99,420 தடுப்பூசிகள்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 63 ஆயிரத்து 960 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள் ளன. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, 12,520 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. அந்த தடுப்பூசிகளும் நேற்று போடப்பட்டு விட்டன. தற்போது பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், போதிய தடுப்பூசி இல்லாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதனிடையே, தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலம் ஹைதரா பாத்தில் இருந்து 85 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் நேற்று சென்னை வந்தன.

மேலும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 14,420 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் நேற்று வந்தன. அதன்படி, மொத் தம் 99,420 தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அவை அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருந்து கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. தேவையின் அடிப்படையில் பல இடங்களுக்கு தடுப்பூசிகள் பிரித்து அளிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x