Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM
கரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் கடந்த ஏப்ரல் 5-ம் தேதி முதல் சர்வ தரிசனத்தை நிறுத்தியது, தற்போது திருப்பதி ஏழுமலை யான் கோயிலில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படு கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆந்திராவில் கரோனா அலை குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், 20-ம் தேதிக்கு பிறகு பக்தர்களின் வருகையை தேவஸ்தானம் அதிகரிக்கலாம் என தெரிகிறது. ஏனெனில், இன்று முதல் 20-ம் தேதி வரை ஆந்திராவில் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை ஓட்டல்கள், டீக்கடைகள், இறைச்சிக் கடைகள், மது கடைகள் திறந்திருக்கும். இதன் காரணமாக, தேவஸ்தானமும் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT