Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM
புதுடெல்லி: கரோனா வைரஸின் இரண்டாம் அலை மே மாதம் உச்சத்தை தொட்டு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக, புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 3 நாட்ககளாக ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 94,052 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1,51,367 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கரோனா தொற்றுக்கு 6,148 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிஹாரில் கடந்த பல நாட்களாக கரோனா உயிரிழப்பு முறையாக பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாநில உயர் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் ஏப்ரல், மே மாதங்களில் நேரிட்ட கரோனா உயிரிழப்புகள் மறு கணக்கீடு செய்யப்பட்டன. அதன்படி விடுபட்ட 3,951 உயிரிழப்புகள் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் 2,197 பேர், பிஹாரின் மறுகணக்கீடு எண்ணிக்கை சேர்த்து 6,148 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT