Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

கடனை திரும்ப தராததால் - தோழியின் மகனை கடத்திய இளைஞர் கைது :

கோவை

கடனாக கொடுத்த பணத்தை திரும்ப தராததால், தோழியின் மகனை கடத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மோகனாம்பிகை. தம்பதியின் மகன் ஹரிஷ் (7). கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் எஸ்.சரவணகுமார் (23), தச்சு தொழிலாளி. இவருக்கும், மோகனாம்பிகைக்கும் ‘இன்ஸ்டா கிராம்’ மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், மோகனாம் பிகை கடந்த ஏப்ரல் 23-ம் தேதி சரவணகுமாரிடம் ரூ.1.5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். பணத்தை திரும்ப கேட்பதற்காக, அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் சரவணகுமார் சென்றுள்ளார்.

ஆனால் பணத்தை திரும்ப தர மோகனாம்பிகை சில நாட்கள் அவகாசம் கோரியுள்ளார். இதையடுத்து, மோகனாம்பிகையின் மகனை, சரவணகுமார் கோவைக்கு காரில் கடத்தி வந்துள்ளார்.

சம்பவம் குறித்து மோகனாம்பிகை தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீஸார், சரவணகுமாரின் அலைபேசி எண்ணை வைத்து, அவர் கோவை வடவள்ளியில் இருப்பதை கண்டறிந்தனர்.

வடவள்ளி போலீஸார் உதவியுடன் நேற்று அதிகாலை சரவணகுமாரை கைது செய்து, கடத்தப்பட்ட சிறுவனை மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x