Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
கோவை மாநகராட்சி ஆணையர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை நஞ்சுண்டாபுரத்தில் அதிக அளவில் உருமாறிய கரோனா பாதிப்பு மக்களிடம் பரவியுள்ளதாகவும், அந்த பாதிப்பால்பொதுமக்கள் பலர் உயிரிழந்துள் ளதாகவும் சிலர் தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
நஞ்சுண்டாபுரத்தில் நோய் தாக்கத்தை கண்டறிய இதுவரை மொத்தம் 650 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் கடந்த 10 நாட்களில் 56 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் உடனடியாக அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, வீடுகள்தோறும் சென்று காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல், மயக்கம், அதிக சோர்வு மற்றும் வயிற்றுபோக்கு இருப்போரை கண்டறிந்து தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தவறான தகவல் பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க மாநகர காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT