Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM
குரோம்பேட்டை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுவன் மூச்சு்த் திணறி உயிரிழந்தார்.
குரோம்பேட்டை, நாகல்கேணி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். துணிகளுக்கு அயனிங் போடும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் சர்வேஸ்(4). நேற்று காலை குழந்தை சர்வேஸ் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள பாலாறு தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதற்கிடையில், மகனை காணவில்லை என்று அவரது தாய் சரஸ்வதி பல இடங்களில் தேடினார்.
பின், தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்த சர்வேஸை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, குரோம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT