Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனத்தில் - மாற்றுத் திறனாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் :

கோவளத்தை அடுத்த முட்டுக்காடு பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

இதன்பேரில், சென்னையைச் சேர்ந்த மொபீஸ் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரி சிறப்பு பள்ளியில் பயிலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ.5 லட்சம் மதிப்பில் உடல் ஆரோக்கியத்துக்கான ஊட்டச்சத்து பொருட்களை, அந்நிறுவனத்தின் தலைவர் பிரேம் சாய் மற்றும் மேலாளர் தினகரன் ஆகியோர் தேசிய நிறுவன இயக்குநர் நசிகேதாவிடம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், துணை பதிவாளர் சங்கர நாராயணன் மற்றும் வழக்கறிஞர் அபிநயா கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x