Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

எள்ளுக்கு குறைந்த விலை விவசாயிகள் குறிஞ்சிப்பாடியில் திடீர் போராட்டம் :

கடலூர்: குறிஞ்சிப்பாடியை சுற்றியுள்ள கருங்குழி, மேட்டுக்குப்பம், மருவாய்,ஆடூர்அகரம், நத்தமேடு, கொத்தவாச்சேரி, அயன்குறிஞ்சிப்பாடி உட்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் எள் பயிரிட்டனர். தற்போது விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடை செய்த எள்ளை குறிஞ்சிப்பாடி வேளாண் விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எள் மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். உள்ளூர் வியாபாரிகள் 80 கிலோ எடை உள்ள மூட்டையை தலா ரூ.6 ஆயிரத்துக்கு விலை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வெளியூர் வியாபாரிகள் மூட்டை ரூ.7 ஆயிரத்து 500 வாங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து விவசாயிகள் குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்த வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் சென்று முறையிட்டனர். அமைச்சர் பன்னீர்செல்வம் வேளாண் விற்பனைக்கூட அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். விவசாயிகளுக்கு பாதிப்பில்லாமல் வியாபாரிகள் விலை கொடுத்து வாங்க வேண்டும். ஏதும் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தார். இதனையடுத்து விவசாயிகள் கலைந்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x