Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

விழுப்புரம் மாவட்டத்தில் - கருப்பு பூஞ்சை தொற்றில் 4 பேர் உயிரிழப்பு :

விழுப்புரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்து வமனையில் கருப்பு பூஞ்சை தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் வடசிறுவலூரைச் சேர்ந்த 55 வயது நபர் நேற்று முன்தினம் இறந்தார். இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானூரைச் சேர்ந்த 30 வயது இளைஞர், சென்னை தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனம் வகாப் நகரைச் சேர்ந்த 65 வயது முதியவர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பிய விழுப்புரம் இந்திரா நகரைச் சேர்ந்த 52 வயது நபர் ஆகியோரும் இந்நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் திண்டிவனம் வகாப் நகரைச் சேர்ந்தவருக்கு மட்டும் கருப்பு பூஞ்சைக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்பு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“தனியார் மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தால் உடனே அரசின் கவனத்துக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தெரியப்படுத்துவது இல்லை. இதனால், இந்நோய் தொற்றால் இறப்பவர்கள் விவரம் உடனுக்குடன் தெரிவதில்லை” என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். முறையான தகவலை உடனுக்குடன் தெரிவிக்க சுகாதாரத் துறை தனியார் மருத்துவமனைக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x