Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM
கண்டமனூரில் ஆட்டோ ஸ்டாண்டை அகற்றிய உள்ளாட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல் செய்த ஓட்டுநர்கள் 48 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், கண்டமனூர் அம்பேத்கர் சிலை அருகில் இயங்கி வந்த ஆட்டோ ஸ்டாண்டை ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று முன்தினம் தேனி சாலையில் குடும்பத்தினருடன் மறியலில் ஈடுபட்டனர்.
கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக சுப்புராஜ், வேலுகாளை, ராஜேந்திரன், சந்திரன், ராமர், தங்கம், முத்துசாமி, பழனிகுமார், முருகன், செல்வம் உட்பட 48 பேர் மீது கண்டமனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT