Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

நிலத்தகராறில் கோஷ்டி மோதல் : மேலூர் அருகே 8 பேர் கைது :

மேலூர் அருகே கட்டையன்பட்டியிலுள்ள பஞ்சமி நிலம் 8 ஏக்கர் யாருக்கு உரிமையானது என்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை இருந்தது. வேப்படப்புவைச் சேர்ந்த ஆண்டிச்சாமி, அந்த நிலத்தை கடந்த 9-ம் தேதி உரிமை கொண்டாட முயன்றார். இதற்கு அம்பேத்கர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் ஒரு கார், மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. ஆண்டிச்சாமி, அம்பேத்கர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆண்டிச்சாமி அளித்த புகாரின்பேரில், அம்பேத்கர், புவனேசுவரி உட்பட13 பேர் மீது மேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் அம்பேத்கர்(42), கார்த்திக்(30), பசுமலை(37), கருப்புராஜ்(40), பாலமுருகன்(30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அம்பேத்கர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்டிச்சாமி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஆண்டிச்சாமி(43), மணிகண்டன்(27), சண்முகம்(24), வெள்ளத்தாய்(36) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x