Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியில் கிழக்கு காவல் நிலைய எஸ்ஐ மாதவராஜ் தலைமையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள மயானம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கி.சுபாஷ்(20) மற்றும் 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து, சுமார் 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT