Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

காய்கறி விலை இயல்புக்கு திரும்பியது :

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் காய்கறி பன்மடங்கு விலை ஏற்றமடைந்தது.

கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை குறைந்து இயல்பு நிலைக்கு வந்துள்ளது. குமரியில் நேற்று நாட்டுத்தக்காளி கிலோ ரூ.17, ஆப்பிள் தக்காளி ரூ.25 க்கு விற்பனை ஆனது. வெண்டைக்காய் ரூ.35, உருளைக்கிழங்கு 30, புடலை 25, பூசணி 10, தடியங்காய் 7, முட்டைகோஸ் 19, காரட் 56, பீட்ரூட் 37, பெரிய வெங்காயம் 35, சின்ன வெங்காயம் ரூ.80-க்கு விற்பனையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x