Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் :

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் காஜா நஜூமுதீன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.அப்போது, எட்டயபுரம் சாலையில் அனுமதியின்றி இயங்கிய பழைய இருசக்கர வாகன விற்பனை செய்யும் கடைக்கு ரூ.500, புதிய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போல், புதுரோட்டில் செயல்பட்ட கடைகளுக்கு ரூ.2,700 அபராதம் விதிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டால் அபராதம் விதித்து, கடைகள் மூடப்படும். அதனை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டால், கடையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் ராஜாராம் தெரிவித்தார்.

கோவில்பட்டி பிரதான சாலையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் சோதனையில் ஈடுபட்டு, தேவைகளின்றி வெளியே திரிந்தவர்களை அழைத்து வந்து கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். தேவை இல்லாமல் சாலைகளில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’’ என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x