Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் :

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சிஐடியு சார்பில் பிரதமருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

சிஐடியு சார்பில் ஜூன் 10-ம் தேதி வரை நாடு முழுவதும் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கமும், பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டமும் நடத்த அகில இந்திய கமிட்டி முடிவு செய்தது. அதன்படி தூத்துக்குடியில் வட்டாட்சியர் மூலம் பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல் தலைமையில் மாவட்டத் தலைவர் ஆர்.பேச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டினை சந்தித்து மனு அளித்தனர். அதில், ‘நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்தி, அனைவருக்கும் இலவச தடுப்பூசி போட வேண்டும். மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாடில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x