Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

மது கிடைக்காததால் சானிடைசரை குடித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு :

அரியலூர்: அரியலூரில் மது கிடைக்காததால் சானிடைசரை குடித்த ஆட்டோ ஓட்டுநர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, அரியலூர் மேலஅக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இளங்கோவன்(33), மோகன்(37), சரவணன்(30) ஆகிய 3 பேரும் மது கிடைக்காததால், கடந்த 7-ம் தேதி சானிடைசரை குடித்துள்ளனர். இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட 3 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், இளங்கோவன் மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இளங்கோவன் உயிரிழந்தார். மோகன், சரவணன் ஆகியோர் அரியலூர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அரியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x