Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

5 நாட்களுக்கு முன் காணாமல் போன சிறுமி கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு :

பெரம்பலூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் நிஷா தர்ஷினி(13). இவர், பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதியிலிருந்து நிஷா தர்ஷினியை காணவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை கண்ணன் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நிஷா தர்ஷினி சடலமாக மிதந்ததைக் கண்டு, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, பெரம்பலூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து, சிறுமியின் சடலத்தை மீட்டு, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக சந்தேக மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x