Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
கரூர்: கரூர் மாவட்ட புதிய எஸ்.பியாக பி.சுந்தரவடிவேல் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கரூர் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வந்த ஜி.சசாங்சாய் திருப்பூர் மாவட்ட எஸ்.பியாகவும், திருப்பூர் மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக பணியாற்றி வந்த பி.சுந்தரவடிவேல் கரூர் மாவட்ட எஸ்.பியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கரூர் மாவட்ட புதிய எஸ்.பியாக பி.சுந்தரவடிவேல் நேற்று எஸ்.பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அமைச்சுப் பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT