Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

கரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர் அறிவுரை :

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செம்பனார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஆட்சியர் லலிதா, எம்.பி எஸ்.ராமலிங்கம், எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர், வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று அறிகுறிகள் கண்டறிவதற்கு தேவையான கருவிகளை ஊராட்சித் தலைவர்கள், செயலாளர்களிடம் வழங்கினர்.

பின்னர் ஆட்சியர் பேசியது: ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு, ஆக்சிஜன் கண்டறியும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி, முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான் ஆகியவை கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஊராட்சித் தலைவர்கள், தங்கள் கிராமங்களில் கரோனா தொற்று பரிசோதனை குழுக்கள் மூலமாக, வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல் ஆகியவை இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.

யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவர்கள் உடனடியாக கரோனா தொற்று அறிகுறி உடையவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊராட்சித் தலைவர்கள், கரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x