Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
ஆம்பூர்: ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த மயிலை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வழித்தவறி மயில் ஒன்று வந்தது. இதை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீட்டனர். இது குறித்து ஆம்பூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், அங்கு வந்த வனத்துறையினர் மயிலை மீட்டுச் சென்று காப்புக் காட்டில் விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT