Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

குடியாத்தம் நகர மருந்தகங்களுக்கு அபராதம் :

குடியாத்தம்: குடியாத்தம் நகரில் அதிக விலைக்கு முகக்கவசம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ததாக மருந்தகங்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அலுவலகம் பரிந்துரையின் பேரில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் சார்பில் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் முகக்கவசம், பிபிஇ கிட், காய்ச்சல் கண்டறியும் கருவி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை விலை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், குடியாத்தம் நகரில் அரசின் விலைப்பட்டியல் படி மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 15 கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில், சில கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த புகாரில் ரூ.6 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x