Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

மதுபானம் கடத்திய இருவர் கைது :

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு 3-வது மற்றும் 5-வது நடைமேடையில் கண் காணிப்புப்பணியில் ஈடுபட் டிருந்தனர்.

அப்போது, அங்கு மைசூரில் இருந்து சென்னை வரை செல்லும் காவேரி விரைவு ரயில் வந்தது. அதில், முன்பதிவு செய்த பெட்டியில் ஏறி ரயில்வே காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, சென்னை நரசிம்ம நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவரது உடமைகளை சோதனையிட்டபோது, அவரிடம் பாக்கெட் சாராயம் 110 லிட்டர், வெளிமாநில மதுபாட்டில்கள் 10 இருப்பது தெரியவந்தது.

இதேபோல், பிருந்தாவனம் ரயிலில் மதுபானங்களை கடத்தி வந்த திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாசம் (35) என்பவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x