Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் கரோனா நிவாரண நிதிக்காக பல்வேறு தரப்பினர் நேற்று நிதி வழங்கினர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினர் கரோனா நிவாரண நிதியை ஆட்சியர் சண்முகசுந்தரம் வசம் நேற்று ஒப்படைத்தனர். இதில், அல்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி விஷாலினி பிரியா, என்பவர் தான் சேமித்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் வழங்கினார்.
அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் ரூ.75 ஆயிரம் தொகையை மாவட்ட ஆட்சியர் வசம் சங்கத்தின் தலைவர் வி.எஸ்.அர்ஜூனன், செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நேற்று வழங்கினர். அரியூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சந்தோஷ், தனது உண்டியல் சேமிப்பு பணம் ரூ.2 ஆயிரம் தொகையை மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT