Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM
கிராம பஞ்சாயத்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில்அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள கிராமபஞ்சாயத்துகளில் பட்டியலின சமூகத் தலைவர்கள் சாதிய பாகுபாட்டுடன் நடத்தப்படுகி்ன்றனர். கடந்த1997-ம் ஆண்டு முதல் 6 பஞ்சாயத்துதலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பட்டியலின தலைவர்களை தேசியக்கொடியை ஏற்றுவதற்கு கூட அனுமதிப்பதில்லை. பெண் பஞ்சாயத்து தலைவர்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். எனவே தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT