Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM
கோவை மாவட்ட காவல் துறை சார்பில் காவல் நிலையங்களுக்கு புதிய இருசக்கர ரோந்து வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் 10 இருசக்கர ரோந்து வாகனங்களை காவல் நிலையங்க ளுக்கு வழங்கி, அவற்றின் செயல் பாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “துடியலூர், வடவள்ளி, சூலூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர் ஆகியவை அதிக புகார்கள் வரப்பெறும் காவல் நிலையங்களாக உள்ளன.
எனவே, ரோந்துப் பணியை வலுப்படுத்தும் நோக்கில்இந்த வாகனங்கள் வழங்கப்படுகிறது. அனைத்து ரோந்து வாகனங்களையும் மூன்று மாத காலத்துக்குள் ஜி.பி.எஸ். மூலம் கண்காணிக்கும் வசதி செய்யப்படும். கடந்தஒரு மாத காலத்தில் மதுபான கடத்தலில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT