Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

கரோனா தொற்று பாதிப்பால் - ஒரே நாளில் 62 பேர் உயிரிழப்பு :

கோவை

கோவை மாவட்டத்தில் தினசரி கரோனா தொற்றால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஆனால், உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக மாநில சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கோவையில் நேற்று ஒருநாளைய பாதிப்பு 2,319-ஆக உள்ளது. 4,992 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 24,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x