Published : 10 Jun 2021 03:11 AM
Last Updated : 10 Jun 2021 03:11 AM

ஊரக பகுதியிலும் கரோனா பாதிப்பு விரைவில் குறையும் : அமைச்சர் பெரியகருப்பன் நம்பிக்கை

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கோவையில் நேற்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் பெரியகருப்பன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை

ஊரக பகுதியிலும் கரோனா பாதிப்பு விரைவில் முழுமையாக குறையும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், கிட்டாம்பாளை யத்தில் உள்ள கரோனா சிகிச்சை மையத்தை நேற்று பார்வையிட்ட அமைச்சர் பெரியகருப்பன், கணியூர் ஊராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்கள் 400 பேருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் தலைமை யில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு மாதத்தில் உச்சத்துக்கு சென்ற கரோனா பாதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது.

மருத்துவமனைகளுக்கு தேவை யான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஊரக பகுதியிலும் பாதிப்பு உள்ளதை உணர்ந்து, கோவை மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து அமைச்சர்கள், செயலர்களை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி உள்ளார்.

கோவை மாவட்டம் புறக்கணிக்கப் படுவதாக அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் அப்படி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் முதல்வர் இரண்டு முறை கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அரசியலுக்கு அப்பாற்பட்ட முதல்வராக, பழி வாங்கும் எண்ணம் இல்லாத முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, ஊரக வளர்ச்சித் துறை செயலர் கோபால், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x