Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் ‘எம்டெக் கம்ப்யூட்டேஷனல் பயாலஜி’ படிப்பை புதிதாக தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய உயிரி தொழில்நுட்பவியல் துறையில் இருந்து ரூ. 5.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுவைப் பல்கலைக்கழ கத்தின் உயிர் தகவலியல், உயிர் அறிவியல் துறை சமர்ப்பித்த ‘எம்.டெக் கம்ப்யூட்டேஷனல் பயாலஜி’ (2020-25) திட்டத்துக்கு மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையில் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதற்காக ரூ. 5.1 கோடி நிதியை புதுச்சேரி பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கும்முடிவுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அனுமதி அளித் துள்ளது.
இதுதொடர்பாக இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், மையத் தலைவர் பேராசிரியர் ஏ. தினகரராவ் கூறியதாவது:
மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையால் அனுமதிக்கப்பட்ட எம்.டெக் கம்ப்யூட்டே ஷனல் பயாலஜி திட்டத்தை இந்திய அளவில் வழங்கும் மூன்று பல்கலைக்கழகங்களில் புதுவை பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இங்கு 11 ஆசிரியர்கள் தனது சர்வதேச ஆராய்ச்சி அனுபவத்துடன் நிபுணத்துவம் பெற்றவர்கள். கணினி அறிவியல், உயிரிதொழில் நுட்பவியல், நுண்ணுயிரியல் மற்றும் மருந்தியல்ஆகியவற்றின் நிபுணத் துவத்துடன் இயைந்த இடைநிலை படிப்புகளை இம்மையம் வழங்குகிறது.
எம்.டெக் கம்ப்யூட்டேஷனல் பயாலஜி முதுகலை பட்டபடிப்புக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாதத்துக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இப்படிப்பில் சேர உயிரி தொழில்நுட்பவியல் (GAT -B)தேசிய அளவிலான தேர்வில் தகுதி பெற வேண்டும். அங்கீகரிக் கப்பட்ட மொத்தமுள்ள 30 இடங்களுக்கான சேர்க்கை GAT-B மதிப்பெண்களின்அடிப்படையில் நடைபெறும். இடஒதுக்கீடு மத்திய அரசின் விதிமுறைகளின்படி இருக்கும் என்று தெரிவித்தார்.
இப்படிப்பில் சேர உயிரி தொழில்நுட்பவியல் (GAT -B)தேசிய அளவிலான தேர்வில் தகுதி பெற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT