Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

புதுச்சேரியில் 642 பேருக்கு கரோனா :

புதுச்சேரியில் புதிதாக 642 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு பெண் உட்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல் விவரம்:

புதுச்சேரி மாநிலத்தில் 8,516 பேருக்கு பரிசோதனை செய் யப்பட்டது. இதில் புதுச்சேரி – 496, காரைக்கால் – 110, ஏனாம் – 22, மாஹே – 14 என மொத்தம் 642 (7.54 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 3 பேர், காரைக்காலில் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனாம், மாஹேவில் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை. இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,648 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 748 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத் துவமனை களில் 1,065 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 5,788 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 6,853 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 932 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 247 (92.32 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 11 லட்சத்து 29 ஆயிரத்து 875 கரோனாபரிசோதனைகள் செய்யப்பட் டுள்ளன. இதில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 119 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 542 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,648 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x