Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
காரைக்கால் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணர் ரவிக் கண்ணன், நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அனீஷ் ஆண்டோ சேவி யர், காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி சுப்ரமணியன் ஆகிய 3 பேரும் ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காரைக்கால் அரசு மருத்துவ மனை சிறப்பு மருத்துவ நிபுணர் துபே, இஎஸ்ஐ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ நிபுணர் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை மருத்துவ அதிகாரி பிருந்தா ஆகிய 3 பேரும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணர் அனுராதா, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணர் நேதாஜி, மருத்துவ அதிகாரி பிரேமலதா, திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்தில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரி ஆனி பியூலா ஜூலா, வர்ச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி தமிழ்வேலன் ஆகிய 5 பேரும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனை முதுநிலை மருத்துவ அதிகாரி ராமகிருஷ்ணன் இஎஸ்ஐ மருத்துவமனைக்கும், ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி தமிழரசி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், மருத்துவ அதிகாரி அபர்னா தேவி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், முத்தியால்பேட்டை இஎஸ்ஐ மருத்துவ அதிகாரி விக்னேஷ் காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரி திருநள்ளாறு சமுதாய நலவழி மையத்துக்கும், முதுநிலை மருத்துவ அதிகாரி தேனாம்பிகை வர்ச்சிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரி சந்திரசேகரன் நல்லாதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை சார்பு செயலர்(சுகாதாரம்) புனிதாமேரி பிறப்பித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT