Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

கோயில் சொத்துகளுக்கு குத்தகைத் தொகை, வாடகை தராதவர்களின் பட்டியலை வெளியிடுக : புதுச்சேரி அரசுக்கு பாஜக வலியுறுத்தல்

புதுச்சேரியில் உள்ள இந்துக் கோயில்களின் சொத்துகளுக்கு முறையாக குத்தகைத் தொகை, வாடகை செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் மாநி லத் தலைவர் சாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை:

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்களில் வாடகை மற்றும் குத்தகைத் தொகை வசூலிப்பதில் உள்ள தடைகளை, சுணக்கங்களை எல்லாம் களைந்து உடனடியாக முழு தொகையை வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற அமர்வு சிறப்பான தீர்ப்பு அளித் துள்ளது. இத்தீர்ப்பு, கோயில் சொத்துக்களை பாதுகாக்க உதவி செய்யும் வகையில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு அனைத்து இந்துக் கோவில் களின் ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளவும், குத்தகைத் தொகை, வாடகை பாக்கித் தொகை ஆகிய வற்றை வசூல் செய்யவும் வழி வகை செய்கிறது.

அறப்பணிகளின்

நிதி ஆதாரம்

இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி புதுச்சேரியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையானது, அனைத்து கோயில்களின் வசமுள்ள சொத்துக்களின் பட்டி யல்களை ஆவணப்படுத்த வேண்டும். சொத்துக்கள், குத்த கைதாரர் வசம் இல்லாமல், பலர் கை மாறிச் சென்று, குறைந்த வாடகையில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

வாடகை மற்றும் குத்தகைத் தொகையை முறையாக செலுத்தாமல் உள்ளவர்களின் பட்டியலை வெளிப்படையாக வெளியிட வேண்டும். உடனடியாக ஆக்கிரமிப் புக்களை அகற்றி இடத்தைக் காலி செய்து நிலுவைத் தொகையை வாடகை பாக்கியை வட்டியுடன், வசூல் செய்ய வேண்டும். தற்போது வாடகையில் உள்ளவர்களுக்கும் நிலத்தின் தற்போதைய மதிப்பிற்கு ஏற்ப புதிய வாடகை புதுப்பித்து உயர்த்தி தர அறிவுறுத்தப் படவேண்டும்.

இப்படி இந்து கோயில்களின் வருவாயை பெருக்கினால் அதன்மூலம் பள்ளிக்கூடங்கள். தொழில் கல்வி நிலையங்கள், திருமணக் கூடங்கள், பெண்களுக்கான பயிற்சி கூடங்கள், பாட சாலைகள், ஆன்மிக வகுப்புகள், மருத்துவமனைகள் என்று பல பொது சேவைத் திட்டங்களை இந்த வருவாய் மூலம் செயல்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x