Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து - முன்களப் பணியாளர்களும் காப்பீட்டில் பயன்பெற நடவடிக்கை : மதுரை எம்.பி.க்கு மத்திய அமைச்சர் கடிதம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து முன்களப் பணி யாளர்களும் காப்பீட்டுத் திட் டத்தில் பயனடைவார்கள் என்று சு.வெங்கடேசன் எம்பிக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர் ஷவர்த்தன் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா முன்களப் பணியாளர் களுக்கான காப்பீடு 24.3.2021-ல் முடிவடைந்த நிலையில் 24.4.2021-ல் புதுப்பிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் உயிரிழந் தவர்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். அதற்கு அமைச்சர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், கடந்த ஏப்.24-ம் தேதியிலிருந்து காப்பீட்டுத் திட் டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. 180 நாட்களுக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீடு மார்ச் 25 முதல் ஏப்ரல் 23-க்கு உட்பட்ட நாட்களில் எழு கின்ற உரிமங்களையும் உள் ளடக்கியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சரின் இந்த விளக்கம், பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களில் ஒரு வர் கூட விடுபட மாட்டார்கள். அனைவருக்கும் காப்பீட்டுத் திட்டத்தின் பயன் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x