Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
தெரு நாய்களுக்கு உணவு அளிக்க, மதுரை ஊர்வனம் குழு சார்பில் 1000 கிலோ அரிசி தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையிடம் வழங்கப்பட்டது.
தெருநாய்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கு உதவும் வகையில் இந்த அரிசி பழங்காநத்தம் அரசு கால்நடை மருத்துவமனையில் அதிகாரி களால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஏற்கெனவே மதுரை மாநக ராட்சி பால் மற்றும் அரிசி வழங் கியது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கால் தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் தவிக் கின்றன. அவற்றை காப் பாற்றும் வகையில், தன்னார் வலர்களின் முயற்சியால் தற் போது பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT