Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து பைக் மற்றும் பார்சல் வாகனங்களில் கஞ்சா கடத்தி வந்து, மதுரை நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பல் விற்பதாக நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். நேற்று நாகமலை புதுக் கோட்டை பகுதியில் சென்ற டிராக்டர் ஒன்றை சந்தேக அடிப்படையில் மடக்கிப் பிடித்து சோதனையிட்டனர். சாக்கு மூட்டையில் 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோட்டை (47) என்பவர் தனது டிராக்டரில் கஞ்சாவை மதுரைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக கோட்டையை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா, டிராக்டர் மற்றும் பைக் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT