Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
இளையான்குடி அருகே கல்லணியில் கண்மாயை யொட்டிய தனியார் பட்டா நிலங்களில் 2 அடிக்குக் கீழே மணல் கிடைக்கிறது.
இந்நிலையில், தனியார் பட்டா நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக சிவகங்கை எஸ்பி செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் சோதனையிட்டனர்.
அப்போது டிராக்டரில் மணல் அள்ளிய வெற்றிவேல் (45) என்பவரை கைது செய்தனர். மேலும் டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் உரிமையாளர் கர்ணன் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT