Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

காப்பீடு திட்டத்தை மறுக்கும் மருத்துவமனைகள்; முதல்வருக்கு எம்.பி செ.ஜோதிமணி கடிதம் :

கரூர்: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரூர் எம்.பி செ.ஜோதிமணி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

கரோனா தொற்று பரவல் காலக்கட்டத்தில், கரோனா சிகிச்சை மட்டுமின்றி இதயம், மூளை அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயிர்காக்கும் பல்வேறு சிகிச்சைகளுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் செல்லாது என தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து தெரிவித்து வருவதாக, நாள்தோறும் மக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் வருகின்றன.

எனவே, தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளையும், அரசாணைகளையும் அனைத்து தனியார் மருத்துவனைகளுக்கும் மீண்டும் அனுப்பி, அவற்றை சரியாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாவட்ட அளவில் குழு அமைத்து, இத்திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x