Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு :

அரியலூர்

அரியலூர் புதுமார்க்கெட் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் துக்க நிகழ்வுக்காக கடந்த 5-ம் தேதி குடும்பத் தினருடன் பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராமத்துக்குச் சென்று விட்டார். இந்நிலையில், நேற்று மதியம் சுரேஷ் ஊருக்கு திரும்பியபோது, வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் நகைகள், ரூ.1,000 ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கயர்லாபாத் போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x