Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
திருச்சி: குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவரை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தண்டனைக் காலம் முடிந்த பிறகும், விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருப்பதாக அரசு மீது இலங் கைத் தமிழர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவி, பாதிப்பை ஏற்படுத்தி வரக்கூடிய இக்காலகட்டத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக் கொலை செய்ய வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து 70-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT