Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
திருச்சி: திருச்சி மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்சி அய்யாளம்மன் படித்துறை நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்துக் குழாயில், ஓயாமரி மயானம் அருகே உந்துக்குழாய் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக 62 மற்றும் 65 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட புகழ் நகர், பாரி நகர், பழைய எல்லக்குடி, காவேரி நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர், கணேஷ் நகர் ஆகிய 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பயன்பெறும் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (ஜூன் 10, 11) குடிநீர் விநியோகம் இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT