Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் - கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கல் :

கும்பகோணம்

கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு பணிக்காக, அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஏசிடி கிராண்ட்ஸ் மற்றும் சர்வதேச ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் நேற்று வழங்கப்பட்டன.

கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆக்சிஜன் வழங்கக் கூடிய சிலிண்டர்களை வழங்க முடிவு செய்யப்பட்டு, கும்பகோணம் ரோட்டரி சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை நேற்று கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் எஸ்.பாலாஜி, உதவி ஆளுநர் மெய்யப்பா, சங்கத் தலைவர் ஜெ.ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x