Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

ரயிலில் சிக்கி 3 மான்கள் உயிரிழப்பு :

அரக்கோணம்: அரக்கோணம் - திருத்தணி இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 புள்ளி மான்கள் ரயிலில் சிக்கி உயிரிழந்தன.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் - திருத்தணி இடையேயுள்ள ரயில் தண்டவாளத்தில் 3 புள்ளி மான்கள் ரயிலில் சிக்கி நேற்று காலை உயிரிழந்தன. இது குறித்த தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே காவல் துறையினர் அங்கு சென்று உயிரிழந்த மான்களின் உடல்களை மீட்டனர். அரக்கோணம் பகுதியையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த மான் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து ராணிப்பேட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், உயிரிழந்த 3 மான்களின் உடல்களை கைப்பற்றிய வனத்துறையினர் உடல் பரிசோதனை செய்து மான்களின் உடல்களை காப்புக்காட்டில் அடக்கம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x