Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டார்.
வேலூர் மாவட்ட இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடசியஸ் ஆகியோர் முன்னிலையில் வருடாந்திர கடன் திட்டத்தை ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டார். திட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள் நடப்பு ஆண்டுக்கான கடன் அளிப்பு ரூ. 4,987.21 கோடி நபார்டு வங்கியின் பரிந்துரையின் பேரில் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. விவசாயத்துக்கு 3,024.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிற முன்னுரிமை துறைக்கு ரூ.888.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கடன் திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி மாவட்ட வளர்ச்சிக்கு உதவும்படி இந்தியன் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் சுரேஷ்குமார், இந்தியன் வங்கியின் வேளாண் மேலாளர் ஜீவகனிசெல்வராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கிளை வங்கி மேலாளர் கவுசிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT