Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு :

ராணிப்பேட்டை

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்க டேசன்(48). இவரது மனைவி செல்வி (42). இவர் ரயில் மூலம்வாலாஜா ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்தார். கீழ்விஷாரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல தனது உறவினரான ரஞ்சித் (25) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் வாலாஜாவில் இருந்து கீழ் விஷாரத்துக்கு வந்தார்.

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பத்மநாபநகர் அருகே வந்த போது எதிரே வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந் தனர். உடனே, 2 பேரும் மீட்கப் பட்டு வாலாஜா அரசு மருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்ட னர். அதில் செல்வி போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். ரஞ்சித் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x