Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

கரோனாவை எதிர்க்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் : வட்டார மருத்துவர் அலுவலர் திருமூர்த்தி அறிவுறுத்தல்

கரோனாவை எதிர்க்க தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம் என வட்டார மருத்துவ அலுவலர் திருமூர்த்தி தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் மருத்துவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில் வாகணன், செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற வட்டார மருத் துவ அலுவலர் ஜி.திருமூர்த்தி பேசும்போது, ‘‘தற்போது கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது.

அடுத்ததாக, கரோனா 3-வது அலை வருவதாக கூறுகின்றனர். இதனை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கரோனாவை எதிர்க்க ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். வந்தவாசி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளிலும் உள்ள பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் முயன்றிருக்க வேண்டும். முன்னு தாரணமாக ஊராட்சி மன்ற தலைவர் கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

அனைத்து கிராமங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதி கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால்தான் பொதுமக்கள்அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள். தடுப்பூசி அச்சத்தை போக்க நீங்கள் முன்னிற்று செயல்படவேண்டும்’’ என்று தெரிவித்தார்.

முடிவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x